tag:blogger.com,1999:blog-1408973058015284946.post2936072787948230487..comments2024-03-27T00:14:01.395-07:00Comments on தமிழறிஞர்கள்: என் முன்மாதிரிமுனைவர் ப. குமார், சென்னைhttp://www.blogger.com/profile/02724240332756960043noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1408973058015284946.post-50176146916267669282010-04-18T00:44:25.280-07:002010-04-18T00:44:25.280-07:00பொதுவாக வளரும் காலத்தில் அப்பா அல்லது தந்தை (இரண்...பொதுவாக வளரும் காலத்தில் அப்பா அல்லது தந்தை (இரண்டு சொற்களிலும் தத்துவரீதியான வேறுபாடுகள் உண்டு என்றாலும் புழக்கத்தில் ஒன்றாகவே உள்ளது)என்பவரும் நாம் வளர்ந்தபிறகான அப்பாவும் ஒன்றுபோல இருப்பதில்லை. வளரும் பருவத்தில் தந்தை என்பது யதார்த்தமாகவும் அறிந்துகொள்ள முடியாததாகவும் உள்ளது. நாம் வளர்ந்தபின், நம்முடன் சேர்ந்து வளரும் அறிதலும், புரிதலும், கதைகளும்.. அப்பாவை ஒரு கதையாடலாக மாற்றிவிடும்போது, அப்பா என்பவர் யதார்த்தலிருந்து நுட்பமான புரிதல் தளத்திற்குள் பரிணமித்துவிடுகிறார். இது எல்லோருக்கும் நிகழ்வதுதான். இந்த பிரதிக்குள் உள்ள அப்பா என்பவர்.. மொழிவழியாக ஒரு கதையாடல் பாத்திரமாக மாறிவிடுகிறார். அப்பாவிற்கு நம்மால் தரப்படும் மதிப்பளிக்கப்பட்ட, மரியாதைக்குரிய இடம் (ஸ்தானம்) அது. <br /><br />உங்கள் கட்டுரை எனது அப்பாவைப்பற்றியும் நினைவை அகழ்ந்தது. யோசிக்கும்போது, கதைகள் என்பதன் நுட்பவிதிகள் இப்படித்தான் மொழியால் கட்டப்படுகிறது. இங்கு அப்பாவைவிட அப்பாவைப் பற்றிய நமது புரிதலின் மதிப்பீடு முக்கியமானது. இப்படி எல்லோருக்கும் கதைகளாக நிறைந்த ஒரு அப்பா இருக்கத்தான் செய்கிறார்கள்.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.com