பரவித் தெரியும்
எனது நிழல்-
என்னைவிட
அழகாக இருப்பதால்
பரிசித்து
முத்தமிடத்
தேடுகிறேன்-
தொல்பொருள்
ஆய்வாளனைப்போல.
தோன்டிய மண்ணும்
ஏனோ
வெறுமையாக உதிர்கிறது.
அப்படியானால்
எனது நிழல்
என்னைப்போல
தனிமையானதா
அதுவும் அநாதைதானே?
உக்கிரம் நிறைந்த
பாட்டுக்குள்
பாவமாய்
ஆட்டக்காரச்
சிறுவனைப் போல
மண் மீது
வீடு கட்டுகிறேன்.
எனது
அன்பிற்குரிய
நிழலுக்காக!
- மு. ரமேஷ்
(இவர் என்னுடைய நண்பர், இவருடைய கவிதைகள் நவீன இலக்கியத் தளங்களில் நின்று பேசுபவை. இந்தப் பக்கத்தில் பதிவு செய்வதற்கு என்னிடம் கொடுத்த பல கவிதைகளில் இது ஒன்று.)
No comments:
Post a Comment