Search This Blog

Friday, October 12, 2007

நிழல் (கவிதை)

மண்மீது
பரவித் தெரியும்
எனது நிழல்-
என்னைவிட
அழகாக இருப்பதால்
பரிசித்து
முத்தமிடத்
தேடுகிறேன்-
தொல்பொருள்
ஆய்வாளனைப்போல.

தோன்டிய மண்ணும்
ஏனோ
வெறுமையாக உதிர்கிறது.
அப்படியானால்
எனது நிழல்
என்னைப்போல
தனிமையானதா
அதுவும் அநாதைதானே?

உக்கிரம் நிறைந்த
பாட்டுக்குள்
பாவமாய்
ஆட்டக்காரச்
சிறுவனைப் போல
மண் மீது
வீடு கட்டுகிறேன்.

எனது
அன்பிற்குரிய
நிழலுக்காக!

- மு. ரமேஷ்


(இவர் என்னுடைய நண்பர், இவருடைய கவிதைகள் நவீன இலக்கியத் தளங்களில் நின்று பேசுபவை. இந்தப் பக்கத்தில் பதிவு செய்வதற்கு என்னிடம் கொடுத்த பல கவிதைகளில் இது ஒன்று.)


No comments: